ஜனவரி 28,
ராஜா ராமண்ணா
இந்திய அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா 1925ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி கர்நாடகா மாநிலத்தில் பிறந்தார்.
எழுச்சியூட்டும் தலைவர், இசைக்கலைஞர், இலக்கியம் மற்றும் தத்துவங்களில் மேதை என பன்முகத்தன்மை கொண்ட ஓர் முழுமையான மனிதர் எனப் போற்றப்படுபவர்.
1974ம் ஆண்டு மே 18ம் தேதி இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவனத்தில் புவிக்கடியில் நடத்தப்பட்ட ‘சிரிக்கும் புத்தர்’ (Operation Smiling Buddha) என்ற மறைமுகச் சொல்லைப்பயன்படுத்தி முதல் அமைதியான ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர்.
இவர் பத்மஸ்ரீ விருது (1968), பத்ம பூஷண் விருது (1973) போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இவரின் பல விஞ்ஞான வெளியீடுகள் பதிவாகியுள்ளன. அத்துடன் இவரது சுயசரிதையான, Years of Pilgrimage (1991), The Structure of Music in Raga & Western Systems (1993) என்னும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.
இந்திய அணுஆற்றல் துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றிய அணுக்கரு அறிவியலறிஞரான இவர் தன்னுடைய 79வது வயதில் (2004) மறைந்தார்.
